கடன் வழங்கும் தனியார் நிறுவனங்களால் மக்களுக்கு நெருக்கடி
ஒன்லைன் மூலம் குறுகியகால கடன் வழங்கும் தனியார் நிறுவனங்களின் சட்டவிரோத நடவடிக்கைகளால் தாங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
பல நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்வதுடன், மற்றும் சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தொலைபேசிகளுக்கு குறுஞ் செய்தி அனுப்புவதன் மூலம் தொடர்பு கொள்கின்றன.

மக்களை ஏமாற்றும் நிறுவனங்கள்
இந்த நிறுவனங்களின் கைத்தொலைபேசி அப்ளிகேஷன்கள் மூலம் வாடிக்கையாளர்களின் கைத்தொலைபேசிகளின் தரவுகள் பெறப்படுவதாகவும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
வட்டி இல்லாமலோ, குறைந்த வட்டியிலோ கடன் பெறும் வசதியும், குறுகிய காலத்தில் கடன் பெறும் வசதியும் இருப்பதால் ஒன்லைன் மூலம் கடன் பெற பலர் ஆசைப்படுகின்றனர்.
ஆனால், வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கிய பின், தங்களுக்கு உறுதியளித்த வட்டியை, தன்னிச்சையாக மாற்றி, அதிக வட்டிக்கு பணம் வசூலிக்கப்படுவதாகவும் பணம் பெற்றவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.