வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு வெளியான இன்பச்செய்தி
வாட்ஸ்அப் பயனர்களுக்கு வேடிக்கையான அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து சத்தமில்லாமல் வெளியேறும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான பயனாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப், பயன்பாட்டின் எளிமைக்காக அவ்வப்போது அப்டேட்களை வெளியிடுகிறது.
இந்நிலையில், எந்தவித அறிவிப்பும் இன்றி வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து வெளியேறும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் குழுவை விட்டு வெளியேறும்போது, வெளியேறிய நபரைப் பற்றிய தகவல்கள் அதில் இருக்கும்.
ஆனால், அடுத்த சில நாட்களில் குரூப்பில் இருந்து வெளியேறினால் அதன் அட்மினுக்கு மட்டுமே தெரியும் என்ற புதிய அம்சம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.