வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்ல தயாராகவுள்ளவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிப்புரையை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அலரி மாளிகையில் இடம்பெற்ற அந்நிய செலாவணி செயலணியின் முன்னேற்ற கலந்தாய்வு கூட்டத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையில் இலங்கையர்களுக்கு அதிக கேள்வி காணப்படுவதால், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியம் தொடர்லும் பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, தற்போது வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு பயணிப்பதற்காக விமான இருக்கை வசதி பற்றாக்குறை குறித்து நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கவனம் செலுத்தியதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.