மொரட்டுவவில் துப்பாக்கிப் பிரயோகம்! இருவருக்கு நேர்ந்த விபரீதம்
மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச்சுடு சம்பவம் கொரலவெல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்த நபர் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தில் அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.