வீட்டில் இருந்த நபரை துப்பாக்கியால் சுட்டுகொன்ற மர்ம நபர்கள்... பரபரப்பு சம்பவம்
அஹுங்கல்ல, போகஹபிட்டிய பிரதேசத்தில் 54 வயதுடைய நபர் ஒருவர் மர்ம நபர்கள் இருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்றையதினம் (08-05-2024) மாலையில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன், அவரது வீட்டில் இருந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.