ஹரக் கட்டாவைக் காப்பாற்ற கொரில்லாத் தாக்குதல்!
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மடகஸ்காரிலிருந்து நாடு கடத்தப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஹரக்கட்டா உள்ளிட்ட குழுவினரை மீட்டு செல்வதற்காக தாக்குதலொன்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன என , குற்றப்புலனாய்வு பிரிவினர் (CID) நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
கொழும்புகோட்டை நீதவான் திலினகமகே முன்னிலையில் இது தொடர்பிலான விபரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சந்தேகநபர்களை நீண்டநேரம் விசாரணை செய்தபோது ஹரக்கட்டாவையும் ஏனையவர்களையும் கொரில்லா தாக்குதல் நடத்தி மீட்டு செல்வதற்கான திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முழுமையான விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் சிஐடியினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இதனை ஆராய்ந்த நீதவான் இது குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றச்செயல்கள் குறித்த விசாரணைக்காக ஹரக்கட்டாவும் அவரது சகாவும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.