கர்ப்பிணி மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற சென்ற கணவனுக்கு நேர்ந்த துயரம்
கர்ப்பிணி மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக பலாப்பழம் பறிக்க சென்ற கணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் எல்பிட்டிய வடக்கு, ஏகொடகெதர பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.எம்.ஷெஹான் லசந்த (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் , பலாய்க்காய் ஒன்றினை கேட்ட நிலையில் மாமனாரின் காணிக்குள் சென்ற கணவன் பலாய்க்காய் பறித்த போது , மாமனார் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையில் தகராறு உச்சக்கட்டம் அடைந்த நிலையில் மருமகனை, மாமனார் கூரிய ஆயுதத்தினால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த நபரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான மாமனார் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் அவரை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.