படிப்படியாக குறையும் வெள்ள அபாய நிலை
களனி கங்கை, களுகங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இருந்த வெள்ள அபாய நிலை படிப்படியாக குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் சகுரா தில்தாரா தெரிவித்தார்.
இந்நிலையில் கம்பஹா, ஜாஎல, வத்தளை, மினுவாங்கொட, கட்டான ஆகிய பகுதிகளில் இன்று படிப்படியாக நீர்மட்டம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
161,000 பேர் பாதிப்பு
அதேசமயம் களனி கங்கைப் படுகையின் தாழ்வான பகுதிகளான கடுவெல, பியகம, கொலன்னாவை, வத்தளை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எனினும் மண்சரிவு அபாயம் தொடர்வதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டை பாதித்துள்ள சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161,000ஐ தாண்டியுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.