இளம் பெண்ணை தாக்கிய மகன் தொடர்பில் ஊவா மாகாண ஆளுநர் வெளியிட்ட தகவல்
தனது மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீன் நாளையதினம் பொலிஸில் ஆஜராகப் போவதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, “என் மகன் தலைமறைவாகவில்லை. நாளை அல்லது அதற்கு முன்னதாகவோ பொலிஸாரிடம் ஆஜராவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், என் மகன் தலைமறைவாகிவிட்டார் என்று வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்பதை பொலிஸார் ஏற்றுக்கொண்டுள்ளனர்” என்று ஊவா மாகாண ஆளுநர் முஸம்மில் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.
அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் மொஹமட் இஷாம் ஜமால்தீனைக் கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அதிகாலையில் ஜமால்தீன் பெண்ணைத் தாக்கியதாகவும், குறித்த பெண் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.