இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களை அரைவாசியாக குறைக்க அரசாங்கம் திட்டம்
2030 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களை பாதியாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட வீரர்கள் 2 லட்சத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
2030ஆம் ஆண்டுக்குள் இராணுவத்தினரின் எண்ணிக்கையை சுமார் ஒரு லட்சமாக குறைக்க அரசாங்கம் கொள்கை தீர்மானம் எடுத்துள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இராணுவம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் குழுவொன்றையும் ஜனாதிபதி நியமித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவம்
இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை சுமார் ஒரு லட்சமாக குறைத்து இராணுவத்தை தொழில்நுட்ப மற்றும் தந்திரோபாய இராணுவமாக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பது இலக்கு என அமைச்சர் தென்னகோன் தெரிவித்துள்ளார்.