மேலும் இரு அமைச்சர்களுக்கு வருகிறது கோத்தாபாயவின் ஆப்பு!
அரசை கடுமையாகச் விமர்சிக்கும் மேலும் இரு இராஜாங்க அமைச்சர்களையும் பதவி நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவர்களைப் பதவி நீக்குவதன் மூலம் ஏற்படும் அரசியல் பின்னடைவு நிலை பற்றியும் இதன்போது ஜனாதிபதியால் கவனம் செலுத்தப்படுகின்றது. அதேவேளை நாட்டில் விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது.
அதன்போது இராஜாங்க அமைச்சுப் பதவிகளிலும் மாற்றம் வரவுள்ள நிலையில் இவ்விருவரும் நீக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது.
இதேவேளை, இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த இன்று நீக்கப்பட்டதுடன் , அப்பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.