ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோட்டாபய விடுத்த அதிரடி உத்தரவு!
கட்சிக்குள் முரண்பாடுகள் இருக்குமாக இருந்தால் அதனை உள்ளேயே தீர்த்துக்கொள்ளுங்கள், வெளியில் விமர்சிப்பதை உடனடியாக நிறுத்துங்கள் என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) உத்தரவிட்டுள்ளார்.
நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம், விவசாயிகளின் உரம் தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
மேலும் இந்த கூட்டத்தில், அரசுக்குள் சில தரப்புக்களுக்கு இடையே நிலவும் கருத்து மோதல்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டன.
இந்நிலையில், பிரச்சனைகள் ஏதேனும் இருக்குமாயின் அது தொடர்பில் வெளியில் விமர்சனங்களை முன்வைக்காது, உள்ளேயே அவற்றை தீர்த்துக்கொண்டு, ஒற்றுமையாகப் பயணிக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியதாக என கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்