இலங்கைக்குக் கடத்தபடவிருந்த பல பொருடகள் இந்தியாவில் பறிமுதல்
தமிழகத்தில் புதுமடம் கடற்கரை ஊடாகப் படகு மூலம் இலங்கைக்குக் கடத்துவதற்காக வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, இந்திய மதிப்பில் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் நேற்று (30) வியாழக்கிழமை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதி இலங்கைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், கடல் வழியாகப் பொருட்கள் கடத்தப்படுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

கடத்தல் பொருட்கள்
கடந்த ஒரு மாத காலமாகத் தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருந்ததால் கடத்தல்கள் குறைந்திருந்த நிலையில், தற்போது விதிகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

உச்சப்புளி அருகே உள்ள புதுமடம் மானாங்குடி சாலையில் உள்ள வீடு ஒன்றில் கடத்தல் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இராமேஸ்வரம் உட்கோட்ட எஸ்.பி. தனிப்பிரிவு பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில், ஆள் நடமாட்டமில்லாத அந்த வீட்டைச் சுற்றி வளைத்து பொலிஸார் சோதனை நடத்தியபோது, அங்கு 28 மூட்டைகளில் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதியொன்றில் கனடாவிலிருந்து வந்தவருக்கு வாடகை வாகனத்துக்குள் நடந்த சம்பவம் ; துயரில் கதறும் உறவுகள்
அந்த மூட்டைகளைச் சோதனையிட்டதில் 19 மூட்டைகளில் பூச்சிக்கொல்லி மருந்து, 5 மூட்டைகளில் ஃபேஸ் க்ரீம்,2 மூட்டைகளில் சோப்பு,தலா ஒரு மூட்டையில் ஷாம்பு மற்றும் காபித்தூள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட செய்யப்பட்ட பொருட்களின் மொத்த இந்திய மதிப்பு சுமார் 13 இலட்சம் ரூபாயாகும் கைப்பற்றப்பட்ட பொருட்களைத் தனிப்பிரிவு பொலிஸார் கீழக்கரை சுங்கத்துறை கண்காணிப்பாளர் வெங்கடேஷிடம் ஒப்படைத்தனர்.
யாழில் படுகொலை செய்யப்பட்ட பெண் விரிவுரையாளர் ; மகள் மற்றும் மருமகனுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு
அதனைத் தொடர்ந்து அந்தப் பொருட்கள் இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
மேலும், இச்சம்பவம் தொடர்பாகத் தலைமறைவாக உள்ள வீட்டின் உரிமையாளரைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.