அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! (Video)
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலை காரணமாக போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதால், அரச ஊழியர்களுக்கு தமது வீடுகளுக்கு அருகில் கடமையாற்ற கூடிய அலுவலகங்களுக்கு இடமாற்றங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
இதனடிப்படையில், அரச ஊழியர்களுக்கு தமது வீடுகளுக்கு அருகில் உள்ள பிரதேசங்களுக்கு இடமாற்றத்தை வழங்கும் முறை உருவாக்கப்பட உள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி R.H.S சமரதுங்க மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் இது சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேசமயம் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளதால், அதிகளவான பணத்தை செலவிட்டு பேருந்துகளில் கடமைக்கு வந்து சென்று வாழ்க்கை கொண்டு நடத்த முடியாத சிக்கலை அரச ஊழியர்கள் எதிர்நோக்கி இருப்பதக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே அரச ஊழியர்களுக்கு இடமாற்றங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
நாட்டில் இடம்பெற்ற மேலதிக செய்திகளின் தொகுப்பு காணொளியில்....