உயர் தர மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய மாணவர்களுக்கு 50,000 ரூபாய் வரையான நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடனல்ல, மீளச் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், தேசிய தொழிற்கல்வித் தகுதி (NVQ) நிலை 3, 4 மற்றும் 5க்கு உட்பட்ட 100 தொழிற்பயிற்சி பாடத்திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மாணவர்கள் பயன்பெறலாம்.
மாணவர்களைத் திறன் மிக்கவர்களாக உருவாக்கி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர், இந்த நிதியுதவி குறித்த விரிவான தகவல்களை www.etfb.lk என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.