தமிழர்களின் வரலாற்றில் விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம்!
தமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
25.12.2021 அன்று ஆழிப்பேரலை நினைவாக "விழுதொலிகள்" இறுவட்டினை வெளியிட்டு வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
போர் முடிந்ததன் பின்னரான காலப்பகுதியில் கலைஞர்கள் தங்களின் படைப்புக்களுக்கு உரித்தான அந்தஸ்து கிடைப்பதில்லை என்பதான ஒரு குற்றச்சாட்டு கலைஞர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
எம்மவர்கள் இந்த மண்ணில் இருந்தபோது கலைகளையும் கலைஞர்களையும் வளர்க்க விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக்கழகம் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு அதனூடாக பாரம்பரிய கலைகளையும் பண்பாட்டையும் வளர்த்திருந்தார்கள்.
அந்தவகையில் தமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலமே பொற்காலம் ஆகும் என அவர் குறிப்பிட்டார். கலைஞர்களும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கும் மகத்தானது.
தங்களின் கலைப்படைப்புக்களால் போராட்டத்தின் பக்கம் மக்களை எழுச்சி கொள்ள வைத்தவர்கள் என்றால் மிகையில்லை எனவும் சிறிதரன் கூறினார்.
மேலும் கலைஞர்களும் இந்த மண்ணில் மீளவும் சிறப்பாக உரிய அந்தஸ்தத்தோடு வாழும் காலம் உருவாக்கப்படும் என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.