சர்வதேச சந்தையில் மீண்டும் எகிறும் தங்கம் விலை! நகைப்பிரியர்கள் பெரும் கவலை
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (05) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,175 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 84.96 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையிலும் விலை அதிகரிக்க வாய்ப்பு
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலை அதிகரிப்பு காரணமாக இன்று இலங்கையிலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் தங்கம் விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ள நிலையில், தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.