இலங்கை வரலாற்றில் 3 இலட்சத்தை கடந்த தங்கம் விலை; இன்று மட்டும் 3 தடவை உயர்வு!
இலங்கை வரலாற்றில் இன்று (8) முதன் முறையாக 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (8) 3 இலட்சத்தை கடந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மூன்று தடவை அதிகரிப்பு
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை தரவுகளின் படி, இன்று ஒரேநாளில் மாத்திரம் மூன்று தடவைகள் தங்க விலை அதிகரித்துள்ளது.
நேற்று (07) 290,500 ரூபாவாக இருந்த 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 303,400 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், நேற்று 314,000 ரூபாவாக இருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 328,000 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை - 22 கரட் ஒரு பவுன் - 296,000 24 கரட் ஒரு பவுன் - 320,000
இன்று முற்பகல் - 22 கரட் ஒரு பவுன் - 299,700 24 கரட் ஒரு பவுன் - 324,000
இன்று பிற்பகல் - 22 கரட் ஒரு பவுன் -303,400 24 கரட் ஒரு பவுன் 328,000 ஆகவும் பதிவாகியுள்ளது.
அதேவேளை வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 4,000 டொலரைத் தாண்டியுள்ளதால் இலங்கையிலும் தங்க விலை சடுதியாக அதிகரித்துள்ளது.