கடற்கரையில் காதலனின் செயலால் 19 வயது காதலி பரிதாப உயிரிழப்பு
Sri Lanka Police
Relationship
Crime
By Sulokshi
5 months ago

Sulokshi
Report
Report this article
தியலகொட பிரதேசத்தில் காதலனால் கடலில் தள்ளிவிடப்பட்ட காதலி பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. களுத்துறை, பயாகலை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய காதலியே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த காதலி தனது காதலனுடன் இணைந்து பயாகலை, தியலகொட பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளார். பின்னர், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் கோபமடைந்த காதலன் தனது காதலியைக் கடலில் தள்ளிவிட்டுள்ளார்.
இதன்போது, கடலிலிருந்த பாறைகளின் மேல் விழுந்த காதலியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தை அடுத்து சந்தேக நபரான காதலன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை பயாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US