மிக எளிமையாக நடந்த கவுதம் அதானி மகன் திருமணம்; 10,000 கோடி தானம்; பலரும் வியப்பு
அதானி குழும தலைவரும், இந்தியாவின் முன்னணி தொழில் அதிபருமான கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானியின் திருமணம் மிகவும் எளிய முறையில் நடந்து முடிந்துள்ளமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜீத் அதானி வைர வியாபாரியின் மகளான திவா ஷாவுக்கும் நேற்று(7) திருமணம் நடந்து முடிந்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாரம்பரிய முறைப்படி நடந்த திருமண விழா மிக எளிமையாக நடத்தப்பட்டுள்ளது.
10,000 கோடி தானம்
ஜெயின் மற்றும் குஜராத்தி கலாச்சாரத்தின் படி திருமண சடங்குகள் நடந்தன. இந்த திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மிக முக்கியமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்நிலையில், மகனின் திருமண விழாவில் ஆடம்பரத்தை தவிர்த்த கவுதம் அதானி, இந்திய ரூ.10,000 கோடி தானமாக வழங்கி அசத்தி இருக்கிறார்.
அதாவது சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக ரூ.10,000 கோடியை நன்கொடையாக கவுதம் அதானி வழங்கியுள்ளார்.
அவரது நன்கொடையின் பெரும்பகுதி சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக செலவிடப்பட உள்ளது. அதேவேளை கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானி மற்றும் திவா ஷா திருமணத்திற்கு முன்பு 'மங்கல் சங்கல்ப்' எடுத்துக் கொண்டனர்.
இதன் கீழ் 500 பெண்களின் திருமணத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். அதாவது ஜீத் அதானி-திவா ஷா தம்பதியினர் ஒவ்வொரு ஆண்டும் 500 பெண்களின் திருமணத்திற்காக ரூ.10 லட்சம் வழங்க இருக்கின்றனர்.
அதேவேளை கடந்த ஆண்டு தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமண மிகப்பிரமாணடமாக இடம்பெற்ற நிலையில் கவுதம் அதானி மகன் திருமணம் ஆடம்பரமில்லாது மிக எளிமையாக நடந்து முடிந்துள்ளமை பல்லருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.