எரிவாயு கசிவு வெடிப்பு; பல புதிய திட்டங்கள் பரிந்துரை
எதிர்காலத்தில் எரிவாயு கசிவைக் கண்டறிய, எத்தில் மெர்காப்டானை உள்ளடக்கிய தனித்துவமான இரசாயன செறிவு அளவைச் சேர்க்க எரிவாயு நிறுவனங்களுக்கு, எரிவாயு கசிவு தொடர்பான சம்பவங்களை ஆராய்ந்து தீர்வுகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு, புதிய முறையை பரிந்துரைத்துள்ளது.
அதன்படி , வசதியாக அடையாளம் காணக்கூடிய விசேட முத்திரையுடன் கூடிய எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது. அதேவேளை நாட்டில் சிலிண்டர்களின் வாயு கலவையில் ஏற்பட்ட மாற்றம் சமீபத்திய வெடிப்புகளுக்கு பங்களித்ததா என்பதைத் தீர்மானிக்கவும் ஆய்வு இடம்பெறுகின்றது.
இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 458 எரிவாயு தொடர்பான சம்பவங்களின் தகவல்களை குறித்த குழு பெற்றுள்ளது.
இவற்றில்-178 அடுப்புகள் வெடித்த சம்பவங்கள், 23 எரிவாயு குழாய் சேதமடைந்த சம்பவங்கள், 9 காஸ் ரெகுலேட்டர் தொடர்பான சம்பவங்கள் மற்றும் எரிவாயு சிலிண்டருக்கு சேதம் ஏற்பட்டதாக ஒரு புகார் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொறுப்பான நிறுவனங்கள் மூலம் எரிவாயு அடுப்புகள் மற்றும் தொடர்புடைய பொருட்களை வாங்குமாறும் பொதுமக்களுக்கு அக்குகுழு அறிவுறுத்தியுள்ளது.