யாழில் வீடுபுகுந்து அராஜகம் ; இளைஞர் வைத்தியசாலையில்
யாழ், சண்டிலிப்பாய் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின்மீது இனந்தெரியாத கும்பலொன்று நடத்திய தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாய் பகுதியில் உள்ள வீடு ஒன்று இனந்தெரியான கும்பலினால் தாக்கப்பட்டுள்ளது.
வன்முறை கும்பல் அட்டகாசம்
முகத்தை கறுப்பு துணியால் கட்டி வந்த நால்வர், அத்துமீறி வீட்டினுள் பிரவேசித்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். அத்துடன் குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி, சமையலறை உபகரணங்கள், தளபாடங்கள் என்பவற்றை அடித்து நொறுக்கி சேதம் விளைவித்துள்ளதோடு, இருமோட்டார் சைக்கிள்களையும் தீ வைத்து எரித்துள்ளனர்.
சம்பவம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தடயவியல் பொலிஸார் தடயங்களை ஆய்வுசெய்துள்ளனர். தாக்குதல் சம்பவத்தில் வீட்டிலிருந்த 20 வயது இளைஞன் ஒருவர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.