போலி தகவல்களை வழங்கியவருக்கு விளக்கமறியலில்
கொழும்பு நீதிமன்றில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தேடப்படும் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி குறித்து போலி தகவல்களை வழங்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த லஹிரு சம்பத் என்ற சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது,
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யத் தேடப்படும் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி குறித்து இந்த சந்தேக நபர் தனது தொலைபேசி மூலம் பொலிஸாருக்கு தவறான தகவல்களை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் பொலிஸ் விசாரணைகளை தவறாக வழிநடத்த அவர் நடவடிக்கை எடுத்தாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.