இலங்கையில் பெரும் துயரம்... பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை!
கந்தானை - படகொட பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நீச்சல் குளத்தில் நீராடச் சென்ற 5 வயது குழந்தை ஒன்று நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் கொழும்பு 09, தெமட்டகொட பகுதியில் வசித்து வந்த 5 வயது குழந்தையே உயிரிழந்துள்ளது.
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நீச்சல் குளத்தில் வேறு பல குழந்தைகளுடன் அந்த குழந்தை நீராடிக்கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கியுள்ளது.
இதனையடுத்து குழந்தை மீட்ட தந்தை ஜாஎல பிரதேச வைத்தியசாலை ஒன்றில் அனுமதியுள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட குழந்தை அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.