கடலில் நீராடச் சென்ற 13 வயது பாடசாலை மாணவன் மாயம்! காலியில் சம்பவம்
காலி - பலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கடலில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் காலி - பலப்பிட்டிய பாலத்திற்கு அருகில் உள்ள முகத்துவாரக் கடலில் இடம்பெற்றுள்ளதாக அஹுங்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டாவ மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தனது பெற்றோருடன் பலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தனது தாத்தா, பாட்டியை பார்க்கச் சென்ற நிலையில் தனது சக நண்பர்களுடன் முகத்துவாரக் கடலில் நீராடிக் கொண்டிருந்த போதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இவ்வாறான நிலையில், காணாமல்போன மாணவனை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.