காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரித்தானிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை
கொழும்பு - காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக இணையத்தில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட பிரித்தானிய பிரஜையான பெண் ஒருவரின் கடவுச்சீட்டை இலங்கை குடிவரவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், எழு நாட்களுக்குள் விசாரணைக்காக குடிவரவுத் திணைக்களத்திடம்புகாரளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
மருத்துவ வதிவிட விசா என்ற பிரிவின் கீழ் இலங்கை வந்த பிரித்தானிய பிரஜையே இவ்வாறு செயற்பட்டமை தெரியவந்துள்ளது.
kayzfra5er என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் முகநூல் கணக்கு மூலம் அவர் ஆர்ப்பாட்ட பகுதி உள்ளிட்ட பகுதிகளில் காணொளிகளை பரப்பியது தற்போது தெரியவந்துள்ளது.
போராட்டக்காரர்களின் தலைக்கு பாதுகாப்பு தரப்பினர் கைத்துப்பாக்கிகளை காட்டுவதாக அழுது புலம்பிய அந்த பெண், பத்தரமுல்லையில் இராணுவ முகாம் கட்டமைப்பு ஒன்று இவ்வாறான நாட்டிற்கு அவசியமில்லை எனவும், நாட்டை மாற்றுவதற்கு ஒன்றிணையுங்கள் என மேற்கத்திய நாடுகளுக்கு அவர் பிரச்சாரம் செய்துள்ளார்.