சீமானையும் சந்தித்தனர் கஜேந்திரன் அணி!
இந்தியாவுக்கு சென்றுள்ள தமிழ்த் தேசிய பேரவை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை சந்தித்துள்ளனர். சென்னை நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சந்திப்பில் தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம்.

ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன.
அதெவேளை தமிழக முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் இதன்போது கையளிக்கப்பட்டது. அதேவேளை தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைவர்களையும் கஜேந்திரன் குழுவினர் சந்தித்திருனர்.