பொலிஸாரிடம் சிக்கிய திருமணமாகாத ஜோடி; விசாரணையில் அம்பலமான சம்பவங்கள்!

Sri Lanka Sri Lanka Police Investigation Gossip Today Crime
By Sulokshi Jan 19, 2024 07:41 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து மயக்கமடைந்த உடனேயே, அவரது பணப்பையில் இருந்த தங்க நகைகள், தொலைபேசிகள் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் திருமணமாகாத ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொத்மலை, தவளந்தன்ன மற்றும் வட்டவளை பிரதேசத்தில் வசிக்கும் திருமணமாகாத தம்பதி  நேற்று முன் தினம் (17) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பொலிஸாரிடம் சிக்கிய திருமணமாகாத ஜோடி; விசாரணையில் அம்பலமான சம்பவங்கள்! | Fraud Unmarried Couple Caught By The Police

மயக்கமடைய வைத்து திருட்டு

சம்பவத்தில்  கொத்மலை, தவலந்தன்ன பகுதியைச் சேர்ந்த செல்லையா சசிகுமார் (வயது: 46) வத்தளையைச் சேர்ந்த சுபாஷ் செல்வராணி (வயது: 39) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்  பொலிஸார் மேலும் கூறியுள்ளதாவது, 

கடந்த 31ஆம் திகதி மிதியகல தெமோதர பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் வீட்டுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பண்டாரவளை நகருக்கு  வந்தபோது மோசடி தம்பதிகள்  பெண்ணிடம் நயமாக பேசி   பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டனர்.

நாட்டை சோகத்தில் ஆழ்த்திய சிறுவனின் மரணம்

நாட்டை சோகத்தில் ஆழ்த்திய சிறுவனின் மரணம்

 இதன்போது  பெண் நிதி நெருக்கடியால் அவதிப்படுவதை அடையாளம் கண்டுகொண்டதை அடுத்து ,  பெண்ணுக்கு தைக்கப்பட்ட சில ஆடைகளை கொடுத்துள்ளனர். அதனை விற்பனை செய்துவிட்டு, தங்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துமாறு அலைபேசி இலக்கமொன்றையும் கொடுத்துள்ளனர்.

பொலிஸாரிடம் சிக்கிய திருமணமாகாத ஜோடி; விசாரணையில் அம்பலமான சம்பவங்கள்! | Fraud Unmarried Couple Caught By The Police

இந்நிலையில்   ஆடைகளை சிலவற்றை விற்பனை செய்துவிட்டு, சில ஆடைகள் மீதம் இருப்பதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த பெண் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசாரணையில்  திடுக்கிடும் தகவல்கள்

மறுமுனையில் பதிலளித்த தம்பதியினர், மீதமிருக்கும் ஆடைகளை எடுத்துக்கொண்டு நுவரெலியாவுக்கு வருமாறு கூற , பெண் தனது மகனுடன் நுவரெலியாவிற்கு  சென்றுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து கிளிநொச்சி இளைஞனுக்கு வந்த கோடிக்கணக்கான பணம்; CID வெளியிட்ட பகீர் தகவல்!

வெளிநாட்டில் இருந்து கிளிநொச்சி இளைஞனுக்கு வந்த கோடிக்கணக்கான பணம்; CID வெளியிட்ட பகீர் தகவல்!

பெண்ணை   நுவரெலியா பொது சந்தைக்கு அருகில் வருமாறு கூறிய ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டிருந்தனர். பயண சோர்வை களைப்பதற்காக, ரோல்ஸ் மற்றும் இனிப்பு பானத்தை கொடுத்துள்ளனர்.  தாயும் மகனும்  அவற்றை வாங்கி பருகியதை அடுத்து   அவர்கள்  சுயநினைவை இழந்தனர்.

அவர்கள் சுயநினைவு திரும்பியபோது, ​​  நுவரெலியா பொது மருத்துவமனையில்  இருந்துள்ளனர்.  இந்நிலையில்  அவர்களிடம்  பொலிஸார் நடத்திய விசாரணையில், மோசடி தம்பதி குறித்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பொலிஸாரிடம் சிக்கிய திருமணமாகாத ஜோடி; விசாரணையில் அம்பலமான சம்பவங்கள்! | Fraud Unmarried Couple Caught By The Police

அதோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணிடம் தங்க வளையல், ஒரு ஜோடி காதணி, சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், 5000 ரூபாய் மதிப்புள்ள தொலைபேசி மற்றும் 5000 ரூபாய் பணமும்  அவரது மகன் வைத்திருந்த விலையுயர்ந்த அலைபேசி என்பனவும் காணாமல் போயுள்ளன.

பொலிஸாரிடம் சிக்கிய திருமணமாகாத ஜோடி; விசாரணையில் அம்பலமான சம்பவங்கள்! | Fraud Unmarried Couple Caught By The Police

சந்தேகநபர்களின் அடையாளம் தெரியவில்லை என தாயும் மகனும் கூறியதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற நுவரெலியா பொலிஸார், சுற்றிலும் உள்ள பல கடைகளின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து சந்தேக நபர்களை கைது செய்தனர்.

சந்தேகநபர்கள்  பன்னில பிரதேசத்தில் இருந்தும், பெண் வட்டவளை பிரதேசத்தில் இருந்தும் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இலங்கையர்களுக்கும் இனி E-PASSPORT!

இலங்கையர்களுக்கும் இனி E-PASSPORT!

இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திய போது, சந்தேநபர் மூன்று மாதங்கள் சிறையிலிருந்து ​​சில தினங்களுக்கு முன்னர், வெளிவந்து  சட்டவிரோத கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும், பல இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

கண்டி, யாழ்ப்பாணம், பண்டாரவளை ஜாஎல, குருநாகல் மற்றும் ஹட்டன் ஆகிய பொலிஸ் நிலையங்களில் சந்தேகநபர் மற்றும் சந்தேக நபரான பெண்ணுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு கோடி பெறுமதியான பொருட்கள் தீக்கிரை : தமிழர் பகுதியில் விசமிகள் அட்டகாசம்

இரண்டு கோடி பெறுமதியான பொருட்கள் தீக்கிரை : தமிழர் பகுதியில் விசமிகள் அட்டகாசம்

மேலும்  கைதான இருவரையும் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் (18) ஆஜர்படுத்தியதையடுத்து, சந்தேகநபர்கள் இருவரும் 29 ஆம் திகதி வரையிலும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அகாலமரணம்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

03 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, Toronto, Canada

07 Feb, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், யாழ்ப்பாணம், கொழும்பு, வத்தளை

13 Feb, 2024
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, கோண்டாவில் கிழக்கு

10 Feb, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, கொழும்பு, Coventry, United Kingdom

07 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Quincy-sous-Sénart, France

09 Feb, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி, Leverkusen, Germany, Gravesend, United Kingdom

03 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Stabio, Switzerland

09 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, கொக்குவில், Ilford, United Kingdom

08 Feb, 2020
மரண அறிவித்தல்

கைதடி, கந்தர்மடம், யாழ்ப்பாணம், Melbourne, Australia

07 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Toronto, Canada, Alberta, Canada

09 Feb, 2025
மரண அறிவித்தல்

Jaffna, கம்பஹா வத்தளை, Dubai, United Arab Emirates, Toronto, Canada

04 Feb, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, தெஹிவளை

07 Feb, 2025
மரண அறிவித்தல்

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

06 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, கம்பஹா வத்தளை, ஜேர்மனி, Germany

12 Feb, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Luzern, Switzerland

02 Feb, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

Manippay, உயிலங்குளம், Anna Paulowna, Netherlands

08 Feb, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Scarborough, Canada

09 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு, பிரான்ஸ், France

09 Feb, 2015
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, சிட்னி, Australia, Thun, Switzerland

08 Feb, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொங்க் கொங்க், Hong Kong, அவுஸ்திரேலியா, Australia, பிரித்தானியா, United Kingdom

31 Jan, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, வெள்ளவத்தை, Wales, United Kingdom, Cardiff, England, United Kingdom

01 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Gossau, Switzerland

08 Feb, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US