SUV வாகனத்தை திருடிய நான்கு இளைஞர்கள் அதிரடி கைது!
நீர்கொழும்பு குரணையில் உள்ள வாகன விற்பனை நிலையமொன்றில் இருந்து 40 மில்லியன் ரூபா பெறுமதியான SUV வாகனத்தை திருடிய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் 18 – 20 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் கட்டான கண்டாவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சந்தேக நபர்களில் 19 வயதுடைய கார் விற்பனையாளரும் அடங்குவதாகவும், அவர் குறித்த தினத்தில் மாலை 06.30 – 10.15 வரையான காலப்பகுதியில் SUV வாகனத்தை திருடுவதற்கு உதவியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
SUV ரக வாகனத்தை திருடிவிட்டு வாகன விற்பனை நிலையத்திலிருந்து தப்பிச் செல்லும் போது கொச்சிக்கடை பகுதியில் விபத்துக்குள்ளானதை அடுத்து குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது விபத்தின் காரணமாக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.