இரண்டு கடற்படை அதிகாரிகள் உட்பட 4 பேருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கமாண்டர்கள் உட்பட 04 பேரை எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் முல்லேரியாவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இன்று (26) கொழும்பு மேலதிக நீதவான் தரங்க மஹவத்த முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதால் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பொலிஸார், சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரினர்.
மேலும், சந்தேகநபர்களை கைது செய்யும் போது அவர்களிடமிருந்து 434 கிராம் 'ஐஸ்' (கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்) போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.