சட்ட விரோதமாக புதையல் தோண்டிய நால்வர் கைது!
பதுளையில் பலகொல்ல பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை வேவெல்ஹின்ன பலகொல்ல பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது தம்புல்ல, வேவெல்ஹின்ன, பலகொல்ல பகுதிகளைச் சேர்ந்த 21 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அரசியல்வாதிகள் வைத்தியசாலைக்குள் நுழைந்துவிட்டால் மருத்துவ ஒழுக்கநெறி காற்றில் பறந்துவிடும்: முரளி வல்லிபுரநாதன்
சந்தேக நபர்களை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பதுளை காவல்துறையினர் மேற்கொண்டு முன்னெடுத்துள்ளனர்.