விசேட அதிரடிப் படையினரால் நால்வர் கைது !
விசேட அதிரடிப் படையினர் விடுதலை புலிகளால் மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் தங்கம், பணம் மற்றும் ஆயுதங்களை தேடுவதற்காக அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்களுடன் பயணித்த நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் 30 தொடக்கம் 38 வயதிற்கிடைப்பட்ட மாதம்பை, கண்டி, நாத்தாண்டியா, மீதெனிய ஆகிய பகுதிகளிலுள்ளவர்கள் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது .
கனகபுரம் பிரதேசத்தில் நான்கு பேரும் நவீன ரக காரில் அன்டனாக்கள், பட்டரிகள், பட்டரி சார்ஜர்கள், உதிரிபாகங்கள், வெளிநாட்டு தயாரிப்பு ஸ்கேனர் என்பவற்றை எடுத்துச் செல்லும் போது விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொலிஸாரிடம் கைதான நால்வரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.