கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான நால்வர்
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 51 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 12 மணித்தியாலத்திற்குள் இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.
இந்திய பிரஜை உள்ளிட்ட நால்வர் கைது
அதன்படி, துபாயிலிருந்து இன்று திங்கட்கிழமை (18) அதிகாலை 01.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பெண் உட்பட இருவர், சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 68,000 வெளிநாட்டு சிரட்டுகள் அடங்கிய 340 சிகரட்டு காட்டுன்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணும் ரஸ்நாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, துபாயிலிருந்து நேற்று (17) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய பிரஜை உட்பட இருவர் , சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 33,000 வெளிநாட்டு சிரட்டுகள் அடங்கிய 165 சிகரட்டு காட்டுன்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிபென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரும் இந்தியா நாட்டைச் சேர்ந்த 51 வயதுடைய நபருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.