விபத்தில் சிக்கிய வெளிநாட்டவர்கள்!
ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு ரஷ்ய பிரஜைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை – கடவத்தை பகுதியில் இருந்து பயணித்த லொறி ஒன்றும், வெளிநாட்டவர் பயணித்த வேனும் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்தில் காயமடைந்த வேன் சாரதி 25 வயதுடையவர் மற்றும் 59 வயதுடைய ரஷ்ய ஆண் ஒருவரும் ரஷ்ய பெண் ஒருவரும் விபத்தில் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்