வெளிநாட்டில் தகாத தொழில் ; நாட்டுக்கு வந்த பெண்ணுக்கு இப்படி ஒரு நிலையா?
பெண் ஒருவரை இங்கிரிய பிரதேசத்துக்கு வரவழைத்து, காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி 810,500 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வத்தளையைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணின் இடைநிறுத்தப்பட்டுள்ள வெளிநாட்டுக் கடவுச்சீட்டை மீளப் பெற்றுத் தருவதாகக் கூறியே பெண்ணை அழைத்து சென்றுள்ள துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது,
நாடு கடத்தப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது விபசார நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து இடைநிறுத்தப்பட்ட வீசாவை மீளப் பெற்றுத் தருவதாகக் கூறி சந்தேக நபர் பெண்ணை கையடக்கத் தொலைபேசியில் அழைத்து இங்கிரிய பிரதேசத்துக்கு வருமாறு கூறியுள்ளார்.
அதன் பின்னர் பெண் அவரைச் சந்திப்பதற்காக இங்கிரிய பிரதேசத்துக்குச் சென்றபோது பெண்ணை சைக்கிளில் காட்டில் உள்ள ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அத்துடன் பெண்னிடம் இருந்து தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.