நடுவானில் விமானத்தில் பயணிக்கு நேர்ந்த விபரீதம்: அலறியடித்து ஓடிய சக பயணிகள்!
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக் கொண்ட நபரொருவர் விமானத்தில் பயணித்தபோது நடுவானில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்ததை அடுத்து ஜேர்மனிக்கு துருக்கியில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகள் கொரோனா தடுப்பூசியின் (Covid Vaccine) இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், பயணிகள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று ஜெர்மனி வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் ஜேர்மனி நாட்டின் ஹம்பர்க் நகருக்கு கடந்த 25-ம் தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து பிஹசூஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டது. துருக்கி நாட்டின் நிறுவனமான பிஹசூஸ் ஏர்லைன்ஸ் பிற ஏர்லைன்ஸ் நிறுவனங்களை ஒப்பிடும்போது பயண கட்டணம் மிகக்குறைவாகும்.
ஹம்பர்க் நகருக்கு புறப்பட்ட பிஹசூஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். அந்த விமானத்தில் 51 வயதுடைய நபரொருவரும் பயணம் செய்துள்ளார். விமானம் ஹம்பர்க் விமான நிலையம் வந்தடைந்தபோது அந்த 51 வயது முதியவர் தனது இருக்கையில் உறங்கியவாறு இருந்துள்ளார். அவரை விமான ஊழியர்கள் எழுப்பியுள்ளனர். ஆனால், அந்த நபர் கண் விழிக்கவில்லை.
அதனால் சந்தேகமடைந்த விமான ஊழியர்கள் விமானத்தில் பணியில் இருந்த வைத்திய ஊழியருக்கு தவவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த நபரை வைத்தியர் பரிசோதனை செய்துள்ளர். அப்போது, அந்த பயணி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதனால், தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அலறியடித்து விமானத்தில் இருந்து இறங்கி ஓடியுள்ளனர்.
இதை தொடர்ந்து உயிரிழந்த அந்த 51 வயதுடைய பயணியின் உடல் விமான நிலையத்தில் இருந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் உயிரிழந்த பயணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
துருக்கியில் இருந்து ஜேர்மனி வர கொரோன தடுப்பூசியின் இரண்டு டோஸையும் போட்டுக் கொண்டால் போதும் என்பதால் அந்த பயணிக்கு துருக்கி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதேவேளை 55 வயதான பயணி விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே உயிரிழந்துள்ளார் என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கொரோனாவால் அந்த பயணி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.