இந்தியாவிலிருந்து கனடா புறப்படவிருந்த விமானம் ; பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
இந்தியாவிலிருந்து கனடாவிற்கு புறப்படவிருந்த விமானமொன்றுக்கு வந்த தகவல் ஒன்றினால் பயணிகள் அனைவரும் திகைப்பில் ஆழ்ந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு புறப்படவிருந்த ஏர் கனடா விமானமொன்றிலேயே ஏற்பட்டுள்ளது.
அதன்படி, டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு 10.50 மணியளவில் ரொரன்றோ செல்லும் ஏர் கனடா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.
இதனை தொடர்ந்து, விரைந்து செயற்பட்ட அதிகாரகள் விமானத்தை சோதனையிட்டு சந்தேகத்துக்குரிய வகையில் எந்தப் பொருளும் விமானத்தில் இல்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், விமான நிலையத்திற்கு குறித்த மின்னஞ்சலை அனுப்பிய நபர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.