யாழிலிருந்து சென்ற மீனவர்கள் பலர் கரை திரும்பவில்லை; தவிக்கும் உறவுகள்
யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் கடற்றொழிலுக்கு சென்ற 15ற்கும் மேற்பட்ட பகுகளும் 45 ற்கும் அதிகமான மீனவர்களும் இதுவரை கரை திரும்பவில்லை என உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வடக்கில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வடமராட்சியின் கடற்பரப்பு கடும் காற்றுடன் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் இன்று அதிகாலை மீன்பிடிக்க பருத்தித்துறை, முனை உட்பட்ட பகுதிகளிலிருந்து 15 படகுகளில் சென்ற 45 இற்கும் அதிகமான மீனவர்கள் இன்று நண்பகல் வரையில் கரை திரும்பவில்லை என உறவினர்கள் கூறுகின்றனர்.
வழமையாக காலை 8மணியளவில் அவர்கள் கரை திரும்புவது வழக்கம் என்றும் அவர்கள் இதுவரை திரும்பவில்லை என்பதனால் மீனவர்களின் உறவினர்கள் கடற்கரைகளில் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இதேவேளை சீரற்ற காலநிலை நிலவுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.