மகனுடன் சேர்ந்து கணவனுக்கு முதல் மனைவி நிகழ்த்திய கொடூரம் ; காருக்குள் எரிந்து கிடந்த குடும்பம் ; சிறுவனின் பகீர் தகவல்
ராஜஸ்தான் மாநிலத்தில், கணவர், அவரின் இரண்டாவது மனைவி உட்பட 4 பேரை இரவோடு இரவாக கொன்று விட்டு, மறுநாள் கதறி அழுது நாடகம் போட்ட பெண் தனது மகன், மகளுடன் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் அருகில் உள்ள ஸ்ரீராம்புரா என்ற கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் 2005ம் ஆண்டு திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2019ம் ஆண்டு தனது முதல் மனைவியின் எதிர்ப்பையும் மீறி மற்றொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

அதிர்ச்சித் தகவல்கள்
இந்நிலையில் சம்பவத்தன்று பஞ்சாயத்து தலைவர், அவரது இரண்டாவது மனைவி தாயார் மற்றும் உறவினர் ஆகிய 4 பேர் ராம் சிங் வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கார் ஒன்றில் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளனர்.
பொலிஸார் பஞ்சாயத்து தலைவரின் வீட்டிற்கு சென்று அவரது முதல் மனைவியின் வீட்டை சோதித்தபோது அங்கு வீட்டு சுவற்றில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதையடுத்து அவரது மகனை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தபோது பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்தன.
பஞ்சாயத்து தலைவரின் இரண்டு மனைவிகளும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அடிக்கடி தனது முதல் மனைவியை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். தட்டிக் கேட்க வந்த முதல் மனைவியின் மகன் மற்றும் மகளையும் அடித்து காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதோடு ஒரு நாள் அப்பாவை கொலை செய்வேன் என்று அடிக்கடி தனது தாயாரிடம் மகன் தெரிவித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு சுனிதாவிற்கும், அவரது கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இரவில் பஞ்சாயத்து தலைவர் உறங்கிய பிறகு தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதில் சத்தம் கேட்டு எழுந்த அவரது இரண்டாவது மனைவியையும் அதேபாணியில் கொலை செய்துள்ளார்.
பஞ்சாயத்து தலைவர் தாய் மற்றும் உறவினர் மகிமாவை சரமாரியாகக் குத்தி கொலையை அரங்கேற்றியுள்ளார். கொலைக்குப் பிறகு, நான்கு பேரின் உடல்களையும் இழுத்து, ஸ்கார்பியோ காரில் ஏற்றி சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு வாகனத்தை ஓட்டிச் சென்று டீசலை ஊற்றி காருடன் தீ வைத்து எரித்துள்ளனர்.
தந்தையின் உடலை மட்டும் எரிக்காமல் காரிலிருந்து சற்று தள்ளி கிடத்தியிருக்கின்றனர்.
தடயவியல் ஆய்வில் எரிக்கப்பட்ட மூன்று உடல்களும் பின் இருக்கையில் மடங்கிய நிலையில் கிடந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் அவர்கள் காருக்குள் வருவதற்கு முன்பே கொலை செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனது தந்தையை உணவில் விஷம் வைத்து பலமுறை கொல்ல முயன்றதாகவும் அது தோல்வியில் முடிவடைந்ததாகவும் கூறியிருக்கிறார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.