இரத்மலானையில் இன்று அதிகாலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூடு
Sri Lanka
Hospitals in Sri Lanka
Gun Shooting
By Yadu
இரத்மலானை தொடருந்து நிலைய வீதி பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.
துப்பாக்கி சூடு
உந்துருளி மற்றும் மகிழுந்து ஒன்றில் பிரவேசித்த இனந்தெரியாத சிலர் வீடொன்றிலிருந்த அந் நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US