மட்டக்களாப்பில் வாயில்லா ஜீவன்கள் மீது துப்பாக்கி பிரயோகம்
மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு மேச்சல்தரை பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தி வந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் இருவர் நேற்று வியாழக்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களிடமிருந்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
கால்நடைகளின் வாயை குறிவைத்து தாக்குதல்
மேச்சல்தரை பகுதியில் தொடர்ச்சியாக பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது இனம் தெரியாதோர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கால்நடைகளை கொன்று வந்துள்ளனர்.
ஈவிரக்கமின்றி கால்நடைகளின் வாயை குறிவைத்து பன்றிவெடிகளை வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டு வந்துள்ளது
இது தொடர்பாக கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துவந்துள்ள நிலையில் வாழைச்சேனை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவதினமான வியாழக்கிழமை (16) மேச்சல்தரை பகுதியில் துப்பாகியுடன் உலாவிதிரிந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் இருவரை மடக்கிபிடித்து கைது செய்தனர்.
மேலும் கைதானவர்களை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.