குவைத் தீ விபத்தில் உயிரிழந்த நபரின் இறுதி கிரியை... கண்ணீர் வரவழைத்த காட்சிகள்!
குவைத்தின் மங்காப் பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 45 இந்தியர்கள் உட்பட 49 பேர் உயிரிழ்ந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த 23 பேர், தமிழகத்தை சேர்ந்த 7 பேர் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த இருவர் என மொத்தம் 45 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல் கேரளா விமான நிலையத்தை இன்றையதினம் வந்தடைந்த நிலையில், அவர்கள் அடையாளம் காணப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான நிலையில் குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தந்தை விஸ்வாஸ் கிருஷ்ணாவின் இறுதி கிரியைகளில் என்ன செய்கிறோம் என்று கூட அறியாமல் 3 வயது மகன் தவித்த காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.