பெற்ற 2 மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை ; ஊரே சேர்ந்து செய்த சம்பவம்
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி 13 மற்றும் 10 வயதில் 2 மகள்கள் உள்ளனர். மேலும் மஞ்சுநாத் தனது தாய், மனைவி, குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

வீட்டிலேயே சிறை
இந்த நிலையில் குடிபோதைக்கு மஞ்சுநாத் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இதற்கிடையே பாடசாலை சென்று வந்த தனது 2 மகள்களையும் திடீரென்று வீட்டிலேயே மஞ்சுநாத் சிறை வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 சிறுமிகளும், பாடசாலைக்கு சென்று ஆசிரியர்களை சந்தித்துள்ளனர்.
அப்போது தங்களை, தங்களது தந்தையே குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும், இதுகுறித்து வெளியே கூறிவிடுவோம் என்பதால் பள்ளிக்கூடத்திற்கு விடாமல் வீட்டுக்குள்ளேயே சிறை வைத்து இருப்பதாகவும் கூறி கதறி அழுதனர்.
இந்த கொடூர சம்பவம் பற்றி மஞ்சுநாத்தின் தாயிடம் கிராம மக்களும், ஆசிரியர்களும் புகாா் தெரிவித்தனர் இதைகேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதற்கு முன்பு தன்னையும் மஞ்சுநாத் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். நான் கத்தி கூச்சலிட்டதால் அவன் வீட்டில் இருந்து தப்பி ஓடி சில நாட்கள் வீட்டுக்கே வராமல் இருந்ததாகவும் கூறி கண்ணீர்விட்டு கதறி அழுதார்.
மஞ்சுநாத் தான் பெற்றெடுத்த 2 குழந்தைகளையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். எங்கள் ஊரின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என புகார் அளித்துள்ளனர்.
அதன்படி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, மஞ்சுநாத்தை நேற்று அதிரடியாக கைது செய்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.