கலவரபூமியான மிரிஹான பகுதிக்கு மகிந்த மற்றும் நாமல் விஜயம்!
நேற்றிரவு பொது மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், இராணுவத்தினர், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் காயமடைந்தனர்.
நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மீது தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் சமூக ஊடக குழுக்களால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போராட்டத்தில், பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கி தாக்குதல் நடத்தியதை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றிருந்தனர்.
அதேவேளை நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

