இலங்கையில் 15 வயது மகளை கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு நேர்ந்த கதி
பொலனறுவை - நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் தமது 15 வயது மகளை, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 45 வயதான தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து பொலனறுவை மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், 10 இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாய் இல்லாத நிலையில், தமது பாதுகாப்பில் இருந்த மகளை குறித்த தந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய சம்பவம் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது பொலனறுவை மேல்நீதிமன்றம் நேற்றைய தினம் (29-11-2022) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.