17 வயது சிறுவனால் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி
தெமட்டபிட்டியவில் 15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் பலாத்காரம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெமட்டபிட்டிய, லுனுவில பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அச் சிறுவன் பெயின்டராக தொழில் செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.
சிறுமிக்கு தாய் தந்தை இல்லை எனவும் பாட்டியுடன் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸில் முறைப்பாடு
71 வயதான பாட்டி தனது பராமரிப்பில் இருந்த பேத்தி காணாமல் போயுள்ளதாகவும் அவர் லுனுவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருப்பதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்தோடு அச் சிறுமி 10 ம் வகுப்பு படித்து வருவதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
விசாரணையின் விளைவாக சிறுமி பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தன்னுடன் காதல் உறவைப் பேணி வருவதாகவும் கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் கட்டுனேரியாவில் உள்ள தனது இல்லத்தில் தம்முடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பாடசாலை சீருடைக்கான ஆடைகளை கொள்வனவு செய்வதற்காக அச் சிறுமி தனது காதலனின் வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.