ரஜினி குணமடைய தீச்சட்டி ஏந்திய ரசிகர்கள்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி அவரின் ரசிகர்கள் தீச்சட்டி ஏந்தி சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந் கடந்த வியாழக்கிழமை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூன்றாவது நாளாக சிறப்பு வார்டில் வைத்து மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி புதுச்சேரியில் அவரது ரசிகர்கள் தீச்சட்டி ஏந்தி வழிபட்டனர்.
மறைமலை அடிகள் சாலையில் உள்ள அம்மன் கோயிலில் ரஜினிகாந்த் படம் வைத்து, ‘எங்கள் சாமியே மீண்டு வா’ எனக் பேனர் வைத்து அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி சிறப்பு பூஜைகளை செய்துள்ளனர்.