தமிழர் பகுதியில் பெரும் சோகம்... திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த குடும்பஸ்தர்!
திருகோணமலை - மூதூர் குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் நேற்றையதினம் (20-04-2024) மதியம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் மூதூர் – பாலத்தடிச்சேனை கிராமத்தில் வசித்துவரும் 3 பிள்ளைகளின் தந்தையான 52 வயதான சூரியமூர்த்தி சுதாகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
பெரியவெளி குளத்து வயலில் வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதியமளவில் மயக்கமுற்று விழுந்ததாகவும் உடனடியாக மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.