புத்தளத்தில் பெரும் சோகம்: பரிதாபமாக உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை!
புத்தளம் - கருவலகஸ்வெவ எகொடபிடிய பகுதியில் யானை தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்றையதினம் (22-02-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில், ஆனமடுவ, ஊரியாவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த நபர், நாளாந்தம் காலை உணவு எடுப்பதற்காக தனது வீட்டுக்கு சென்றுவரும் நிலையில், இன்று காலை உணவு எடுப்பதற்கு வீட்டுக்கு வருகை தராததால், மனைவி அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியுதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது கைத்தொலைபேசி இயங்கிய போதிலும் அவரிடமிருந்து பதில் எதுவும் கிடைக்காமையினால், சந்தேகமடைந்த மனைவி அவர் இருந்த இடத்திற்கு வருகை தந்து பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் எனக் கூறப்படுகிறது.