கணவர் வேறு திருமணம்; வறுமையால் வாழ்க்கையை தொலைத்த குடும்பம்!(Video)
இலங்கையில் தமிழர் பகுதியில் உள்நாட்டு போரின் பின்னர் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு பக்கத்தில் வெளிநாட்டு உறவினர்களின் அளவுமீறிய உதவிகளால், இளம் தலைமுறையினர் வழமாறி செல்கின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அதேசமயம் மற்றுமொரு புறத்தில் போரின் வடுக்கள் மாறாது இன்னும் , 30 வருடங்களுக்கு முந்தைய குப்பி விளக்கின் வெளிச்சத்தில் வாழ்பவர்ளும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அதுமட்டுமல்லாது கணவனை இழந்த கணவனால் கைவிடப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் படும் கஸ்ரங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது.
அந்தவகையில் விசுவமடு பகுதியில் வாழும் கணவனால் கைவிடப்பட்ட பெண் தலைத்துவ குடும்பம் ஒன்றின் அவலநிலையினை தாங்கிய வண்ணம் இன்றைய உறவுப்பாலம் நிகழ்ச்சி அமைந்துள்ளது.